குற்ற வழக்கின் விசாரணை தாமதப்படுத்தப்படுமானால் அவரது சஸ்பெண்டை நீக்கம் செய்து மீண்டும் பணியில் சேர்க்க சட்டத்தில் இடமுள்ளது. எனவே, குற்ற வழக்குகள் விரைவில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட வேண்டும். குற்றச்சாட்டுகள் பொய்யானது என்று தெரியவந்தால் அந்த ஊழியரை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும். அதற்கு மாறாக உண்மையில் லஞ்சம் பெறும்போது பிடிக்கப்பட்டு தொடரப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டால் அது கேன்சர் செல்லை மீண்டும் உடலில் செலுத்துவதற்கு சமமாகும்.
சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்க சம்பந்தப்பட்ட ஊழியருக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மை, குற்ற வழக்கின் நிலை ஆகியவற்றை பரிசீலிக்க வேண்டும். சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்குகளில் குற்ற வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிடும் வகையில் புலன் விசாரணை அதிகாரியை சேர்ப்பதில் எந்த தவறும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.