புதுடெல்லி: காங்கிரஸ் முத்த தலைவர் பவன் கேரா கடந்த 2023 பிப்ரவரி மாதம் மும்பையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர் பெயரில் அதானி பெயரையும் இணைத்து விமர்சித்தார். கேரா தனது கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட பிறகும் அவர் மீது பல மாநிலங்களில் பதிந்த வழக்குகளை ரத்து செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்தது. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.