சென்னை: காவிரியில் நீர் திறக்க மறுக்கும் கர்நாடகத்திடம் இருந்து இழப்பீடு பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக அணைகளில் 92 டிஎம்சி நீரை வைத்துக்கொண்டு வழங்க மறுப்பது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.