கார் பள்ளத்தாக்கை நெருங்கியபோது தான் ஆபத்தை உணர்ந்த சிவராஜ், உடனே கூச்சலிட்டார். ஆனால், பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை ஸ்வேதா அழுத்தியதால், கார் வேகமாகச் சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் 300 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் விழுந்தது. தகவல் அறிந்ததும் சுல்தாபாத் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். பள்ளத்தில் விழுந்த கார் சுக்கு நூறாக நசுங்கிக் கிடந்தது. ஸ்வேதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரீல்ஸ் எடுக்கும் ஆசை விபரீதத்தில் முடிந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.