இந்த நிலையில், 12 கிலோ வாட்டுக்கு குறைவாக உள்ள தொழில் நிறுவனங்களை 3A1 கட்டண விகிதத்திற்கு மாற்ற தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு பரிந்துரை செய்வது உள்ளிட்ட ஒரு சில சலுகைகளை மட்டும் முதல்வர் அறிவித்திருப்பது குறு, சிறு மற்றம் நடுத்தரத் தொழில் துறையினரை மிகுந்த அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது. எனவே, பொருளாதாரத்தையும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தற்போதைய சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகளை அழைத்துப் பேசி, அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்று அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.