செங்கடலில் கப்பல்கள் மீது டிரோன், ஏவுகணை தாக்குதல்

துபாய்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு இடையே போர் நடந்து வருகின்றது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி படைகள் செயல்பட்டு வருகின்றன. செங்கடல் வழித்தடத்தில் அவ்வப்போது சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி படைகள் தாக்குதல் நடத்துகின்றது. வெடிகுண்டு தாங்கிய டிரோன்கள், ஏவுகணைகள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மூலமாக ஹவுதி படை தாக்குதலை நடத்தியுள்ளன. இந்நிலையில் 18 டிரோன்கள், 2 ஏவுகணைகள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை அமெரிக்க படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன. நவம்பர் 19ம் தேதிக்கு பின்னர் வர்த்தக கப்பல்கள் மீது நடத்தப்படும் 26வது ஹவுதி தாக்குதல் இதுவாகும்.

Related posts

தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் தொலைதூரக் கல்வியில் புதிதாக 4 பட்டயப்படிப்புகள் அறிமுகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு

கட்சி சின்னம் கைவிட்டு போனது என்று சும்மா… குழந்தை போல் அழாதீர்கள்: உத்தவை விமர்சித்த ஏக்நாத் ஷிண்டே!