புதுடெல்லி: இந்திய துணை கண்ட அல் கய்தா மற்றும் தெஹ்ரீக் இ தலிபான் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட் சேர்த்தல் மற்றும் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கான சதியில் ஈடுபட்டது குறித்த வழக்கை தேசிய குற்ற புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களில் என்ஐஏ அதிரடி சோதனை நடத்தியது.