ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே அழுகிய நிலையில் வாலிபரின் சடலத்தினை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே, கண்ணத்தாங்கல் பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து, நேற்று காலை துர்நாற்றம் வீசியது. இதனால், அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் உடல் தூக்கில் தொங்கிய படி, அழுகிய நிலையில் இருந்தது.
இதுகுறித்து ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்த போலீசார், இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.