சென்னை: நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் மற்றும் தொழிலதிபர் கோவர்தனின் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். ரூ.4 கோடி பறிமுதல் விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள், தொழிலதிபர் கோவர்தன் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன், ரூ.4 கோடி பணத்துடன் பிடிபட்ட ஊழியர்கள் சதீஷ், நவீன், பெருமாள் மற்றும் மற்றொரு சதீஷுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளது. செல்போன் அழைப்பு பதிவு ரெக்கார்டு அடிப்படையில் இவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.