Sunday, June 30, 2024
Home » ரிசர்வ் வங்கியின் புதிய விதியால் தனிநபர் கடன் பெற சிக்கல்?

ரிசர்வ் வங்கியின் புதிய விதியால் தனிநபர் கடன் பெற சிக்கல்?

by Karthik Yash

மும்பை: வராக்கடன் அதிகரிப்பதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது. பிணையில்லாமல் வழங்கப்படும் தனிநபர் கடன்கள் சில வசூலிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, வங்கிகள் இத்தகைய கடன்களை வழங்கும்போது வசூலிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் இடர்பாட்டு நிதியை 25 சதவீதம் உயர்த்தி, 125 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. அதாவது, வங்கிகள் தனிநபர் கடன்கள் வழங்கும்போது, அவற்றை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டால் சமாளிக்க ஒதுக்கி வைக்கும் தொகையை 25 சதவீதம் அதிகரிக்க வேண்டும். இந்த புதிய விதியால் வங்கியிடம் நிதி இருப்பு குறைவதால், கடன் வழங்குவது குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தனிநபர் கடன்கள் வழங்கும்போது, அவர்கள் பிற வங்கிகளில் பெற்ற கடன் நிலுவையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. வீடு, கல்வி, வாகனத்துக்காக வாங்கப்படும் கடன்கள், நகை அடமான கடன்களுக்கு இது பொருந்தாது எனவும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

3 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi