சென்னை மாநகராட்சி, ராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களில் தனியார் நிறுவனம் மூலம் துப்புரவு பணிகள் அமலாக்குவதற்கான திட்டக்கூறு தொடர்பான பொதுமக்கள் பங்களிப்புக் கூட்டம் 16.06.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-78க்குட்பட்ட அறிஞர் அண்ணா மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி சமுதாய நலக்கூடம், சச்சிதானந்தம் தெரு, கொசப்பேட்டை, சென்னை-12 என்ற முகவரியில் கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) அவர்கள் மற்றும் வட்டார துணை ஆணையாளர்கள் (வடக்கு (ம) மத்தியம்) அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தப் பங்களிப்புக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் வருகைபுரிந்து தங்களுடைய கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.