டெல்லி: நீட் தேர்வு வினாத்தாளை விற்பனை செய்த மோசடி கும்பலின் தலைவன் ரவி அட்ரி உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் இருந்து நீட் வினாத்தாளைக் கசியவிட்டதும், ஜார்க்கண்ட் வழியாகப் பீகாருக்கு அனுப்பி வைத்ததும் அம்பலம். நீட் வினாத்தாள் கசிவு மட்டுமின்றி ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளிலும் ரவி அட்ரிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.