இந்நிலையில் விமானசேவையை விரிவாக்கம் செய்யும் நோக்கத்தில் மேலும் 1,000க்கும் மேற்பட்ட விமானிகள் மற்றும் முதல் நிலை அதிகாரிகளை பணியமர்த்த போவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தில் சமீபத்தில் அறிவிக்க பட்ட சம்பள உயர்வு திருப்திகரமாக இல்லை என தெரிவித்திருந்த விமானிகள் தங்களை மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் மரியாதையுடன் நடத்துவதில்லை என டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவுக்கு ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.