ரத்தன் டாடாவுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் 1500 ஊழியர்கள் கடிதம்

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் 1,000க்கும் மேற்பட்ட விமானிகளை பணியமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது 1,800ருக்கும் மேற்பட்ட விமானிகள் பணியில் இருக்கின்றனர். இந்நிறுவனம் புதிதாக 470 விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் விமானசேவையை விரிவாக்கம் செய்யும் நோக்கத்தில் மேலும் 1,000க்கும் மேற்பட்ட விமானிகள் மற்றும் முதல் நிலை அதிகாரிகளை பணியமர்த்த போவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தில் சமீபத்தில் அறிவிக்க பட்ட சம்பள உயர்வு திருப்திகரமாக இல்லை என தெரிவித்திருந்த விமானிகள் தங்களை மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் மரியாதையுடன் நடத்துவதில்லை என டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவுக்கு ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

Related posts

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு