சென்னை: புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை தகவல் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக புதிதாக ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது எனவும் தேர்தல் முடிந்த நிலையில் தற்போது புதிதாக ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளதாகவும், புதிதாக ரேஷன் அட்டை கோரி இதுவரை சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் எனவும் உணவுப்பொருள் வழங்கல்துறை தெரிவித்துள்ளது.