சென்னை : 80 வயதிற்கு மேற்பட்டவர்களை ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து பொருட்களை பெற வேண்டும் என வற்புறுத்தக்கூடாது என்று உணவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 80 வயதிற்கு மேற்பட்டவர்களும் ரேஷன் கடைகளில் நேரில் சென்று பொருட்களை பெற வேண்டும் என உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டதாக செய்தி வெளியான நிலையில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.