காஞ்சிபுரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் கிளை மற்றும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை சார்பில் 34வது ரத்ததான முகாம் ஒலிமுகம்மதுபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று முன்தனம் நடந்தது. கிளை தலைவர் முஜிபுர் ரகுமான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்சாரி, மருத்துவ அணி செயலாளர் சர்புதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்தம் வழங்கினர்.