இந்நிலையில், கிணற்றில் சகதியில் அதிகமாக இருந்ததால் காப்பாற்ற சென்ற 3 பேரும் சேற்றில் சிக்கி கொண்டனர். மேலும், 3 மாணவர்களில் அபினேஷ், நிதீஷ்குமாருக்கு நீச்சல் தெரிந்த நிலையில் கயிற்றை பிடித்து மேலே வந்தனர். அதில் 1 மாணவன் மற்றும் காப்பாற்ற சென்ற 3 பேரும் சகதியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து வந்த ராசிபுரம் தீயணைப்பு துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கிணறு அதிக ஆழம் காரணத்தாலும் சகதிகள் அதிகம் உள்ளதால் அவர்களை மீட்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கிணற்றில் மூழ்கிய விக்னேஷ் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மேலும், 3 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.