இதை தொடர்ந்து வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பச்சரிசி, கோழி, ஆடு, பன்றிகளை கொண்டுவந்து சுவாமிக்கு காணிக்கை செலுத்தினர். இதையடுத்து 1000 கிலோ ஆட்டுக்கறி, 1400 கிலோ பன்றிக்கறி, 100 கிலோ கோழிக்கறி என 2,500கிலோ கறி சமைக்கப்பட்டது. மிகபெரிய பாத்திரங்களில் தயாரான மெகா விருந்து விடிய விடிய பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் உள்ளூர் மட்டுமின்றி சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 15000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு பாக்குமரத்தட்டில் அசைவ உணவு வழங்கப்பட்டது. வளர்ச்சியின்றி மக்கள் விவசாயத்தில் செழித்து வாழ கடந்த 100 ஆண்டுகளாக இந்த சமபந்தி கறி விருந்து விழா நடைபெற்று வருவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.