கடந்த 2018ம் ஆண்டு காவல் நிலையத்தில் கண்ணன் அளித்த புகாரில் நிலங்களை அளந்துதரும் வரை எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என போலீசார் அறிவுறுத்திய நிலையில் மீண்டும் வீடுகட்டும் பணியை தொடங்கிய ரவிச்சந்திரனிடம் கண்ணன் சென்று தன் கையிலிருந்த சங்கை ஊதியவாறு தன்னுடைய நிலத்தை ஆக்கிரமித்தது ஏன் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக கவுன்சிலரின் கணவர் கீழே கிடந்த செங்கலை எடுத்து பள்ளி ஆசிரியரை தாக்கியுள்ளார். அதிமுக கவுன்சிலரின் கணவர் தாக்கியதில் காயமடைந்த பள்ளி ஆசிரியர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.