விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ம் தேதி ‘வீர் பால திவாஸ்’ என்று அறிவிக்கப்படுவார்கள். இந்த விருதை பெற 18 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். awards.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். மேலும் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்காருக்கான வழிகாட்டுதல்களை அறிய அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.