டெல்லி : குடியரசு தலைவர் இல்லத்தை பார்வையிட இன்று முதல் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 10ம் தேதி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டையொட்டி வெளிநாட்டு தலைவர்கள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.