பலாத்கார குற்றவாளி அடித்து கொலை: சிறுமியின் தந்தை, மாமன் சரண்

புவனேஸ்வர்: ஒடிசாவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையும், மாமனும் அடித்து கொன்றனர். சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி (35) ஒருவர், ஒடிசா மாநிலம் புல்பானி மாவட்டம் ரைக்கியா பகுதியில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். அப்பகுதியை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுமி வீட்டு வேலைகளை செய்து வந்தார். அந்த சிறுமியை வீட்டிற்குள் இழுத்து சென்ற கட்டிட தொழிலாளி, அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டார். வெளியே சென்றிருந்த சிறுமியின் தந்தை, மாமா ஆகியோர் வீட்டிற்கு வந்தனர்.

அவர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை, அந்த சிறுமி தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள், அந்த கட்டிட தொழிலாளியை தேடி பிடித்து கட்டையால் அடித்தே கொன்றனர். இதுகுறித்து ரைக்கியா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாகந்த் பத்ரா கூறுகையில், ‘கட்டிடத் தொழிலாளியை கொன்ற சிறுமியின் தந்தை, மாமா ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொலையான கட்டிட தொழிலாளியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்