இந்த மனு டெல்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஆஜரான டெல்லி போலீசார் ராகுல்காந்திக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
ராகுலின் சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர், டிவிட்டர் பதிவில் இருந்து சிறுமியின் புகைப்படத்தை ராகுல் அகற்றிவிட்டதாக தெரிவித்தார். மேலும் டிவிட்டரின் வழக்கறிஞரும் ராகுல்காந்தி அந்த டிவிட்டை நீக்கிவிட்டதாக நீதிமன்றத்தில் உறுதிபடுத்தினார். இதனை தொடர்ந்து ராகுலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக்கோரும் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.