இளம்பெண்களை பலாத்காரம் செய்த ஆசாமி மூதாட்டியை சீரழித்தபோது சிக்கினார்: என்கவுன்டர் செய்ய வேண்டும் என மக்கள் ஆவேசம்


திருமலை: தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர் சிவக்குமார் (40). எந்த வேலைக்கும் செல்லாமல் ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்களிடம் நட்பாக இருப்பது போல் நடித்து தனியாக இருக்கும்போது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்வாராம். இதை வெளியே சொன்னால் அவமானம் எனக்கருதி யாரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லையாம். இதனால் அவர் தொடர்ந்து பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் ஒரு மூதாட்டி, அதேபகுதியில் தனியாக வசித்து வருகிறார். இதையறிந்த சிவக்குமார் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்குள் புகுந்து கதவை தாழ்ப்பாள் போட்டார். அன்றிரவு மூதாட்டியை அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மூதாட்டி நேற்று அப்பகுதியில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சிவக்குமாரை தேடினர். கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து வெங்கடாபூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். நேற்று மாலை அப்பகுதியில் பதுங்கியிருந்த சிவக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் போலீஸ் நிலையம் எதிரே திரண்ட அப்பகுதி மக்கள், பல பெண்களை சீரழித்த சிவக்குமாரை என்கவுன்ட்ரில் சுட்டுக்கொல்ல வேண்டும் என ஆவேசமாக கூறினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

வடலூர் வள்ளலார் பெருவெளி சைட் ‘பி’யில் மருத்துவமனை கட்ட ஐகோர்ட் அனுமதி!!

எண்ணூர் கடற்கரையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு..!!

தமிழகத்திற்கான திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்குவதில்லை: அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு