ஊர், ஊராக அழைத்து சென்று சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 27 ஆண்டு சிறை

மூணாறு: ஊர்ஊராக அழைத்து சென்று சிறுமியை பலாத் காரம் செய்த வாலிபருக்கு 27 ஆண்டு சிறை. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள பூப்பாறை மூலத்தரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்கிற சதீஷ் (29). இவர், கடந்த 2020ம் ஆண்டு ராஜாக்காடு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, வீட்டில் ஆட்கள் இல்லாதபோது அடித்து துன்புறுத்தியுள்ளார். பின்னர் சிறுமி வைத்திருந்த பணத்தையும் பறித்துக் கொண்டு, அவரை வாகனத்தில் கடத்திச் சென்று தேனி மாவட்டம், போடி நந்தவனத் தெருவைச் சேர்ந்த ரவீந்திரன் (34) என்பவரிடம் சிறுமியை ஒப்படைத்துள்ளார்.

அவர் சிறுமியை சென்னை, மதுரை ஆகிய ஊர்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ராஜாக்காடு போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக ராஜேஷ் என்கிற சதீஷ், ரவீந்திரன், உத்தமபாளையம் அருகே உள்ள அய்யம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முருகேசன் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு தேவிகுளம் அதிவிரைவு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜான்சன், ‘ரவீந்திரனுக்கு 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,30,000 அபராதம், ராஜேஷ் என்ற சதீஷூக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Related posts

இந்த ஊரில் துளசிதான் முதன்மைப்பயிர்!

கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்துக்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அளித்த பின் நடவடிக்கை : ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

40 வயது ஆசாமியுடன் சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: கேரளாவில் பரபரப்பு