அவர் சிறுமியை சென்னை, மதுரை ஆகிய ஊர்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ராஜாக்காடு போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக ராஜேஷ் என்கிற சதீஷ், ரவீந்திரன், உத்தமபாளையம் அருகே உள்ள அய்யம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முருகேசன் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு தேவிகுளம் அதிவிரைவு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜான்சன், ‘ரவீந்திரனுக்கு 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,30,000 அபராதம், ராஜேஷ் என்ற சதீஷூக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.