சென்னை : “ரங்கநாதன் தெருவை சுற்றிலும் 66 சிசிடிவி கேமராக்கள், 7 கண்காணிப்பு கோபுரங்கள்” என்று சென்னை மாநகர காவல் ஆணையர் பேட்டியில் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் அருண் ஆய்வு மேற்கொண்டுள்ளார். சென்னை தி.நகரில் குழந்தைகள் தொலைந்து போவதை தடுக்க கைகளில் ‘டேக்’ போடப்படுகிறது என்றும் காவல்துறை எடுத்த நடவடிக்கைகளால் கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது என்றும் ஆணையர் அருண் குறிப்பிட்டுள்ளார்.