இது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜ விழாவாகிவிட்டது. அதனால் தான் அந்த விழாவிற்கு செல்ல மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். நாங்கள் அனைத்து மதங்கள் மற்றும் நடைமுறைகளை மதிக்கிறோம். இந்து மதத்தின் மிகப்பெரிய தலைவர்கள் கூட கும்பாபிஷேக விழாவை பற்றிய தங்களது கருத்துக்களை பகிரங்கப்படுத்தி உள்ளனர். இது ஒரு அரசியல் செயல்பாடு. இது முற்றிலும் பிரதமரின் விழா மற்றும் ஆர்எஸ்எஸ் விழா. இதில் நாங்கள் கலந்து கொள்வது என்பது சாத்தியமில்லை. இந்தியாவின் பிரதமர் மற்றும் நமது கொள்கைக்கு பிரதான எதிரியான ஆர்எஸ்எஸ்சும் ஒரு விழாவை கைப்பற்றி தேர்தல் விழாவாக மாற்றியுள்ளது எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்றார்.
* தொகுதி பங்கீடு பிரச்னை தீர்க்கப்படும்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்தியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள தொகுதி பங்கீடு பிரச்னை கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அது குறித்து கூட்டணி கட்சிகளுடன் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அது மிக சிறப்பாக நடந்து வருகின்றது. எனவே பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இந்தியா கூட்டணி ஒன்றிணைந்து இந்த ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜவை தோற்கடிக்கும்” என்றார்.