ராமேஸ்வரம்: ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இலங்கை படை கைதுசெய்த மீனவர்கள், படகுகளை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு. ராமேஸ்வரம் மீனவர்களின் ஒரு நாள் வேலை நிறுத்தம் காரணமாக 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தி வைப்பு. ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர், படகுகளை இலங்கை கடற்படையினர் நேற்று சிறைபிடித்தனர்.