இலங்கை சிறைபிடித்த 22 பேரை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தம் துவங்கியது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 22 பேரை நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மூன்று விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை ஜூலை 5ம் தேதி வரைகாவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் வேலைநிறுத்தப் போராட்டத்தை மீனவர்கள் நேற்று துவக்கினர்.

இதனால் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. 3 ஆயிரம் மீனவர்கள் வேலையிழந்துள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான மீன் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன்பிடித் துறைமுகம் வேலைநிறுத்தத்தால் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. இதனிடையே சுமார் 100 சிறிய விசைப்படகு மீனவர்கள் வழக்கம்போல் அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

Related posts

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரையில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கேரள தங்க கடத்தல் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!

நாளை மஹாளய அமாவாசை; ராமேஸ்வரம்,சேதுக்கரை கடல்களில் சிறப்பு ஏற்பாடு: பாதுகாப்பு பணியில் 500 போலீசார்