Monday, July 1, 2024
Home » இலங்கை சிறைபிடித்த 22 பேரை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தம் துவங்கியது

இலங்கை சிறைபிடித்த 22 பேரை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தம் துவங்கியது

by Neethimaan

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 22 பேரை நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மூன்று விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை ஜூலை 5ம் தேதி வரைகாவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் வேலைநிறுத்தப் போராட்டத்தை மீனவர்கள் நேற்று துவக்கினர்.

இதனால் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. 3 ஆயிரம் மீனவர்கள் வேலையிழந்துள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான மீன் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன்பிடித் துறைமுகம் வேலைநிறுத்தத்தால் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. இதனிடையே சுமார் 100 சிறிய விசைப்படகு மீனவர்கள் வழக்கம்போல் அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

You may also like

Leave a Comment

two × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi