ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள் சங்க கூட்டமைப்பினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரையும், படகுகளையும் விடுவிக்கக் கோரி உண்ணாவிரதம் போராட்டம் நடத்துகின்றனர். அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளனர்.