தங்கச்சிமடம் மீனவர் மெல்சன் (23) இரண்டாம் முறையாக கடற்படையினரால் கைது செய்யப்பட்டதால் ஓராண்டு சிறை தண்டனை விதித்தார். மற்ற 20 மீனவர்களையும் 5 ஆண்டு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறை தண்டனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். மீண்டும் இவர்கள் இரண்டாம் முறையாக கடற்படையினரால் கைது செய்யப்பட்டால் 18 மாத சிறை தண்டனை உறுதிப்படுத்தப்படும். மேலும் படகின் உரிமையாளர்கள் மே 6ம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டார். 20 மீனவர்களும் ஒரு சில தினங்களில் தமிழகம் திரும்புவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.