அப்போது, கோயில்களில் இலவச தரிசனம் கேட்பவர்களின் பின்னணி என்ன என்று நீதிமன்றம் அறிய விரும்புகிறது என்ற கூறிய நீதிபதிகள், காவல்துறை ஆணையர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், கோயில்களை நிர்வகிக்க அறநிலையத்துறை உள்ள நிலையில் இலவச தரிசனம் கேட்பதை எவ்வாறு ஏற்க முடியும்?. இதேபோல் திருப்பதியில் இலவச தரிசனம் கேட்பீர்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். திருப்பதியில் 3 நாள் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலையில் இங்கு இதுபோன்று மனு தாக்கல் செய்வது ஏன்? என்ற கேள்வியும் எழுப்பியுள்ளனர்.