நேற்றைய தினம் ராமேஸ்வரத்திலிருந்து 500 மேற்பட்ட விசைப்படகில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது நள்ளிரவில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். அதுமட்டுமல்லாமல் 10க்கும் மேற்பட்ட படகில் இருந்த மீன்பிடி வலைகளை வெட்டி வீசி இப்பகுதிக்கு மீன்பிடிக்க வரக்கூடாது என்றும் எச்சரித்தனர். இதன் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் படகு ஒன்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 நஷ்டத்துடன் வீடு திரும்பினர். இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெறும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.