சென்னை : ஸ்ரீராம நவமி, சிவராத்திரி பண்டிகைகளுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கும்படி உத்தரவிட முடியாது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. ராம நவமி, சிவராத்திரி பண்டிகைகளுக்கு விடுமுறை அறிவிக்க உத்தரவிடக் கோரி அர்ஜுனன் இளையராஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். மனுதாரர் அர்ஜுனன் இளையராஜா ஒன்றிய அரசை அணுக நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.