ராமநாதபுரம் :ராமநாதபுரத்தில் அரசு சட்டக் கல்லூரிக்கான புதிய கட்டடத்தை 2024-25 கல்வியாண்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. 2017-ல் தொடங்கப்பட்ட ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரிக்கு இடம் இல்லாததால் பெருங்குளம் பள்ளியில் இயங்கி வந்தது என்றும் சட்டக் கல்லூரிக்கு கூத்தக்கோட்டை பகுதியில் புதிய கட்டடம் கட்டப்பட்டும் இன்னும் திறக்கவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.