இதனை போன்று கேரளா, ஆந்திரா, கர்நாடக, புதுச்சேரி, மேற்குவங்கம், உத்திரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இதில் மங்குஸ்தான், ரம்டான், துரியன், டிராக்கன், பேரிச்சைங்காய், நாவல், பெரிய நெல்லி, வால்பேரிக்காய், சிவப்பு கொய்யா ஆகிய பழங்களை ஆர்வத்துடன் வாங்கி வருவர். கடந்த காலங்களில் அங்கு விற்பனை செய்யக்கூடிய அரியவகை பழங்கள் மற்ற ஊர் பகுதிகளில் கிடைப்பது அபூர்வமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி போன்ற நகரப்பகுதிகள், சாயல்குடி, முதுகுளத்து£ர் உள்ளிட்ட பிற ஊரக பகுதிகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
இதனை போன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடியதும், கண், சிறுநீரகம், வயிறு, மற்றும் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளுக்கும் ஆரோக்கியதரக்கூடிய பேரிச்சைகாய், நெல்லி. மற்றும் சக்கரை நோய், மலச்சிக்கல் உள்ளிட்டவற்றிக்கு சிவப்பு கொய்யா, நாவல் பழம், வால் பேரிக்காய் உள்ளிட்ட பழங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இது குறித்து ராமநாதபுரம் பொதுமக்கள் கூறும்போது, குற்றாலத்தில் கிடைக்கின்ற அபூர்வமான மழை பழங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது, விலை அதிகமாக இருந்தாலும் கூட சீசன் பழம், மருத்துவகுணம் வாய்ந்த பழங்கள் என்பதால் வாங்கிச் செல்கிறோம் என்றனர்.