ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சீதா என்பவர் வீட்டை பூட்டிவிட்டு சாமி கும்பிடச் சென்ற நிலையில் 30 சவரன் திருட்டுப்போயுள்ளது. கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 30 சவரன் நகை திருடப்பட்டதை கண்டு சீதா அதிர்ச்சி அடைந்தார். சீதா அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.