சென்னை: இராமநாதபுரத்தில் சாலை விபத்தில் இறந்த 2 பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். மாயாகுளம் பகுதியில் அரசுப் பேருந்தும், தனியார் வாகனமும் மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.