அந்த வகையில், ராமரின் ஆட்சி, நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்குக் கூட உத்வேகத்தின் ஊற்றாக இருந்திருக்கிறது. அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா, தேசத்தின் கோடிக்கணக்கான மக்களை ஒன்றிணைத்தது. அனைவரின் உணர்வையும் ஒன்றாக்கியது. பக்தியை ஒன்றாக்கியது. அனைவரின் வார்த்தையிலும், இதயத்திலும் ராமர் குடிகொண்டார். பலரும் ராம பஜனைகளை பாடி, சமர்ப்பணம் செய்தார்கள். ஜனவரி மாதம் 22ம் தேதி மாலையில், நாடெங்கிலும் ராமஜோதி ஏற்றப்பட்டு, தீபாவளி கொண்டாடப்பட்டது.
இது, தேசத்தின் ஒற்றுமையின் பலமாக பார்க்கப்பட்டது, இதுவே வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது உளவுறுதிப்பாட்டின் மிகப் பெரிய ஆதாரம். இந்த முறை நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு, மிகவும் அற்புதமானதாக இருந்தது. இந்த முறை அணிவகுப்பில் கலந்து கொண்ட 20 அணிகளில் 11 அணிகள் பெண்களின் அணிகளாகவே இருந்தன. இந்த முறை 13 பெண் தடகள வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண் சக்திக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
கடந்த பத்தாண்டுகளில், பத்மவிருதுகள் வழங்கும் முறையானது முழுமையாக மாற்றமடைந்திருக்கிறது. இப்போது இது மக்களின் பத்மவாக மாறிவிட்டது. பத்ம விருதுகளைப் பெறும் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நாட்டில் உறுப்புதானம் குறித்த ஆக்கப்பூர்வமான சூழல் உருவாகி வருகிறது. இதன் மூலம் பல உயிர்களும் காப்பாற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.