ஆக.26, 27-ல் 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது: தேர்தல் ஆணையம்

ஆக.26, 27-ல் 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த 10 பேர், தேர்தலில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்வாகினர். 10 பேர் மக்களவைக்கு தேர்வான நிலையில் காலியாக உள்ள 10 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. 2 பேர் ராஜினாமா செய்த நிலையில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.

Related posts

திருவண்ணாமலையில் முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி மாணவர்களுக்கு கால்பந்துப் போட்டி

கடலூர் முதுநகரில் சமூகவிரோதிகளின் கூடாரமான ஆங்கிலேயர் காலத்து கட்டிடம்

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு..!!