புதுடெல்லி: கடந்த 2020ம் ஆண்டு தெலங்கானாவில் இருந்து பிஆர்எஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கேசவராவ். சமீபத்தில் பிஆர்எஸ் கட்சியில் இருந்து கேசவராவ் விலகினார். கடந்த 3ம் தேதி காங்கிரசில் அவர் சேர்ந்தார். பிஆர்எஸ் கட்சியை விட்டு விலகிய கேசவராவ் நேற்றுமுன்தினம் எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவை மாநிலங்களவை துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ஏற்று கொண்டார் என அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. கேசவராவின் ராஜினாமாவால் மாநிலங்களவையில் காலியாக உள்ள எம்பிக்களின் இடங்கள் 16 ஆக உயர்ந்துள்ளது.