அதிமுக அலுவலகத்துக்கு எங்களது பேச்சுவார்த்தை குழுவினர் மரியாதை நிமித்தமாகவே சென்றுவந்தார்கள். அதிமுகவிடம் மாநிலங்களவை சீட் கேட்டுள்ளோம். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடரும். பாஜகவுடன் திரை மறைவு பேச்சுவார்த்தை என ஒன்றுமில்லை. அதிமுக, பா.ஜ.க. இரு கட்சிகளும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தன. மாநிலங்களவை சீட் தர அதிமுக மறுத்ததாக வெளியான தகவல் உறுதிப்படுத்தப்படாதது. அனைத்து கட்சிகளுக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இருப்பதால் எங்கள் கட்சிக்கும் கேட்கிறோம். மாநிலங்களவை சீட் வேண்டும் என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது. எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம். வெகு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்,”இவ்வாறு தெரிவித்தனர்.