டெல்லி: மாநிலங்களவையில் ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததை கண்டித்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முக்கிய பிரச்சனை குறித்து வழங்கும் நோட்டீஸை ஏற்க மறுப்பதாக திருச்சி சிவா குற்றச்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு போட்டியாக ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.