சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான 3 இலங்கைத் தமிழர்களையும் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கவேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், முருகன் ஆகியோரை திருச்சி முகாமில் இருந்து விடுவிக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 32 ஆண்டுகள் நீண்ட சிறைவாசத்துக்கு பிறகும், மீண்டும் சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பது கொடுரம் என பழனிசாமி தெரிவித்துள்ளார்.