சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மஞ்சள் காமாலை பாதிப்பு அதிகரித்ததால் திருச்சியில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து விடுதலையான பிறகு திருச்சி இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் சாந்தன் தங்கி உள்ளார்.