ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற 25ம் தேதி தேர்தல் நடைபெறுகின்றது. இந்நிலையில் கரன்பூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள குர்மீத் சிங் கூனார் உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி குர்மீத் சிங் உயிரிழந்துள்ளார்.