ராஜஸ்தான் அமைச்சர்கள் 2 பேர் விபத்தில் காயம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அமைச்சர்கள் 2 பேர் நேற்று நடந்த விபத்தில் காயம் அடைந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் அமைச்சரவையில் இடம் பெற்று இருப்பவர்கள் லால் சந்த் கட்டாரியா மற்றும் முராரி மீனா. நேற்று இவர்கள் ஜோத்பூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் 2 பேரும் ஒரே காரில் வந்தனர். சதார் பகுதியில் கார் வந்த போது எதிரே தவறான பாதையில் வந்த மற்றொரு கார் அமைச்சர்கள் வந்த கார் மீது மோதியது. இதில் 2 அமைச்சர்களும் காயம் அடைந்தனர். குறிப்பாக அமைச்சர் கட்டாரியாவின் காலில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு சிறுமியும் காயம் அடைந்தார்.

Related posts

இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி..!!

சென்னை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டது போன்ற மாயத்தோற்றம் உருவாக்கி கொண்டிருக்கிறார் : எடப்பாடி பழனிசாமி