ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் அருகே சரக்கு ரயிலின் இரண்டு வேகன்கள் தடம் புரண்டதால், ஏழு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – மதார் ரயில்வே பிரிவின் அசல்பூர் ஜாப்னர் மற்றும் ஹிர்னோடா ரயில் நிலையங்கள் இடையே சென்ற சரக்கு ரயில், நேற்று அதிகாலை தடம் புரண்டது. அதனால் சரக்கு ரயிலின் இரண்டு வேகன்கள் தண்டவாளத்தை விட்டு விலகியது. தகவலறிந்த ரயில்வே மீட்புப் பணியாளர்கள் தடம் புரண்ட சரக்கு ரயிலின் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் இப்பாதை வழியாக செல்லும், 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.