சென்னையில் மழைநீர் வடிகால்களை தூர் வாரும் பணியை மாநகராட்சி தொடங்கியது. 4,000 சாலைப் பணியாளர்களை கொண்டு மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணி நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சியின் 1,480 கிலோ மீட்டர் நீள மழைநீர் வடிகால்கள் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் நோக்கில் கால்வாய்கள், நீர்நிலைகள், வடிகால்கள் தூர்வாரப்படுகின்றன. தூர்வாரும் பணிகளுக்காக ஒரு மண்டலத்திற்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.